மொக்க ஜோக்ஸ் | Mokka Jokes in Tamil

Mokka jokes in tamil – நாம் பல புத்தகங்கள் படித்திருப்போம் ஆனால் ஜோக்ஸ் படிக்கும் அளவிற்கு எதுவும் ஈடாகாது அதனால் இந்தத் தொகுப்பில் தமிழில் சிறந்த மொக்க ஜோக்ஸ்களை இப்பொழுது காணப்போகிறோம்.

Mokka jokes in tamil

மொக்க ஜோக்ஸ் தமிழில் | Mokka jokes in tamil

1. தபால்காரர்: இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் உங்க ஊருக்கு.

வீட்டுக்காரர்: ஏன், தபால்ல அனுப்பி இருக்கலாம்ல.?

2. திருடன் : தம்பி ! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..

சிறுவன் : அடகுக் கடையிலே !

திருடன் : ????

3. காதலன் : உன் காதலுக்காக என் உயிரையே கொடுப்பேன் டியர்!

காதலி : அதற்கு அவசியமில்ல!… நம்ம லவ், என் அப்பாக்கு தெரிஞ்சா, அவரே எடுத்துடுவாரு!

காதலன் : ???????

4. ஒருவர் : பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிட்டாரே.. அப்படி என்ன சொன்னாங்க?

மற்றொருவர் : பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களாம்…

ஒருவர் : ???

5. அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்.

மன்னர் : அரண்மனைக்கு நாம் ஏற்கனவே கான்கீரிட் போட்டாச்சு ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!

6. கடை முதலாளி : ஏண்டா அரிசி மூட்டையில இவ்ளோ அரிசி குறைஞ்சிருக்கு?

வேலைக்காரன் : மூட்டைக்கு அடியில் ஓட்டை விழுந்திருக்கும் முதலாளி.

கடை முதலாளி : அடியில ஓட்டை விழுந்தா எப்படிடா மூட்டைக்கு மேல அரிசி குறையும்?

வேலைக்காரன்: 😂😂

7. வேலைக்காரன் 1 : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.

வேலைக்காரன் 2 : அதுக்கு நீ ஏன் பதர்ற?

வேலைக்காரன் 1 : இல்லாத ‌விஷய‌த்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க!

8. வந்தவர்: என்ன இன்டர்வியூ வந்தவங்க எல்லாருக்கும் தண்ணி கொடுத்து கண்ணுல ஊத்திக்க சொல்றாங்க ஏன்?

வேலைக்காரர்: வேல கிடைக்கல்லேன்னா எப்படியிருந்தாலும் இதெ‌ல்லா‌ம் வெறு‌ம் க‌ண் துடை‌ப்பு‌ன்னு சொல்லப்போறீங்க. அதை நா‌ங்க முத‌லயே பண்ணிட்டா பிரச்சனை இல்ல பாருங்க!

9. கண்டக்டர்: யோவ் டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?

டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீவேற.

10. முதலாளி: இங்க நிறையா திருட்டு போகும். அதனால நீ ராத்திரி கண் முழுச்சி கவனிச்சுக்கணும்.

வேலைக்காரன்: து‌ங்கவே மா‌ட்டே‌ன். ஒரு சின்ன சத்தம் கேட்டா கூட நான் முழிச்சிக்குவேன் ஐயா, ‌நீ‌ங்க‌ கவலையே‌ப் படா‌தீ‌ங்க.

11. முதலாளி: என்னடா இது அம்மா நான் எது சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாங்க?

வேலைக்காரன்: நீங்க பேசாம அவங்க தூங்கும்போது சொல்லிடுங்க.

12. மன்னர் : தளபதியாரே, என்ன இது போர் நடக்கும் நேரத்தில் 7 நாள் விடுப்பு வேண்டுமா ?

மந்திரி : ஆம் மன்னா, போர் முடிந்த அடுத்தநாளே அரண்மனைக்கு வந்து விடுவேன்.

மன்னர் : ??????????????

13. மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை எங்கே?

அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு, சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா!

மன்னன் : ????

14. வீட்டுக்காரன் : என்னடா இது வெறும் ஆட்டுக்கால் மட்டும் வாங்கிட்டு வர்ற?

வேலைக்காரன் : நீங்க தந்த 10 ரூபாய்க்கு பின்ன என்ன ஆட்டுக்கால்ல தங்க கொலுசு மாட்டியா தருவாங்க.

15. வீட்டுக்காரர் : டெய்லி காய்கறி வாங்கறதுல கமிஷன் அடிச்சு நீ வீடே கட்டியிருக்கலாமே?

வேலைக்காரன் : போங்கய்யா என்னை ரொம்ப புகழாதீங்க.

16. ஒருவர் : என்னுடைய மொபைல் பில் எவ்வளவு ?

கால் சென்டர் பெண் : சார் *123னு டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒருவர் : ஸ்டுபிட் ! என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றியே !

17. வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?

கடைக்காரர்: ஒரு ரூபாய்.

வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???

கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.

வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

18. தொண்டர் : இளவரசே வீரமுடன் வேட்டைக்கு புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?

மன்னர் : போய்யா, போற வழியில் ஒரு நாய் துரத்திட்டு வருது.

19. தரகர்: மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறாரு..

பெண்: அப்ப மாப்பிள்ளை நிரந்திர வேலைல இருக்கார்னு சொல்லுங்க !

20. வந்தவர்: அரிசி கிலோ எவ்வளவு?

கடைக்காரர்: பதினைஞ்சு ரூபாய்!

வந்தவர்: கொஞ்சம் குறைச்சுப் போடக்கூடாதா?

கடைக்காரர்: இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொள்ளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க. இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?

21. தரகர்: கறுப்பா இருக்கிற பொண்ணுக்குப் பத்து பவுன் போடறாங்களாம். ஒரு கால் நொண்டிப் பொண்ணுக்குப் பதினைஞ்சி பவுன் போடறாங்களாம். எது வேணும் ?

மாப்பிள்ளை வீட்டுகாரர்:கறுப்புக் கலர்ல நொண்டிப் பொண்ணு பாருங்களேன்.

22. தேவி : உங்க கடையில வாங்கிப்போன பூரிக்கட்டை சீக்கிரம் உடைஞ்சிடுச்சே?

கடைக்காரர் : அடேயப்பா ! உங்க கணவர் தலை அவ்வளவு ஸ்ட்ராங்கா!? அப்போ இரும்புலத்தான் செய்யச் சொல்லணும்.

தேவி : 😀😀

23. கடைக்காரர் 1 : எங்க சலூன்ல கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்!

கடைக்காரர் 2 : இதென்ன பெருசு எங்க ஃபைனான்‌ல கம்பெனில சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்.

24. கடைக்காரர்: சார் எங்க கடைல து‌ணி வா‌ங்‌கினா. அ‌வ்வளவு சீக்கிரம் கிழியாது

வாடிக்கையாளர்: சும்மா பொய் சொல்லாதீங்க 

கடைக்காரர்: பொ‌ய் இ‌ல்‌லீ‌ங்க உ‌ண்மைதா‌ன். 

வாடிக்கையாளர்: இப்பகூட அவரு 2 மீட்டர் கேட்டப்ப கிழிச்சுதான கொடுத்தீங்க.

25. ஒருவர் : பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க…?

மற்றவர் : குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம் அதான்?

ஒருவர் : ???

26. காதலி : டியர் நான் எப்பவுமே உங்க நிழல்லதான் நிற்பேன்

காதலன் : அதுக்காக நான் வெயில்லயே நிக்க முடியாது.

27. வாடிக்கையாளர்: என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு

கடைக்காரர்: இது ஸ்டூல் இல்ல, மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.

Mokka jokes in tamil

28. வாடிக்கையாளர்: இந்த கிராமர் புத்தகம் என்ன விலை?

கடைக்காரர்: 150 ரூபாய் சார்

வாடிக்கையாளர்: கொஞ்சம் சொல்லிக் குடுப்பா

கடைக்காரர்: சொல்லியெல்லாம் கொடுக்க முடியாது சார், நீங்கதான் படிச்சுக்கணும்.

29. வாடிக்கையாளர்: எங்கே கடைய மூடிடப்போறீங்களோன்னு மூச்சு வாங்க ஓடி வர்றேன்

கடை‌க்கார‌ர் : அதெல்லாம் இங்க விக்கறதில்லீங்க!

30. மாப்பிள்ளை வீட்டார்: பெண் வீட்டுக்காரங்க ஏன் இன்னும் கல்யாணத்தைத் தள்ளி வச்சிக்கிட்டே இருக்காங்க?

பக்கத்தில் இருந்தவர்: ஆயிரம் பொய் சொல்ல இன்னும் முன்னூறு பொய் பாக்கியிருக்காம்.. அதனாலதான்!

31. மன்னன்: வர வர சேவகர்களுக்கு என்மீது பயமே இல்லைபோல் தெரிகிறது அமைச்சரே..

அமைச்சர்: ஏன் மன்னா?

மன்னன்: யாரங்கே எனக் குரல் கொடுத்தால், யாருமில்லை என பதில் குரல் வருகிறது!

32. வ‌ந்தவ‌ர்: ஏன் சார் குறை‌ந்த ‌விலை‌‌யி‌ல் செவிட்டு மெஷின் கிடைக்குமா?

கடை‌க்கார‌ர்: 2 ரூபா‌ய்ல இரு‌க்கு வேணுமா?

வ‌ந்தவர்: அது எப்டி சார் ஒர்க் பண்ணும்?

கடை‌க்கார‌ர்: இது எதுவு‌ம் பண்ணாது. ஆனா இது உங்க காதுல வ‌ச்சு இருக்கறதப் பார்த்த உடனே எல்லாரும் உங்ககிட்ட கத்திப் பேசுவாங்க.

33. முதியவர் : அவ‌சர அழை‌ப்பு‌க்கு போன் செய்ய முடியாம‌ல் குழ‌ம்‌பி இரு‌ந்தா‌ர்.

கடைக்காரர் : ஏன்?

முதியவர்b : அவசர அழை‌ப்பு‌க்கு 911 எ‌ன்பது தெரியும்! ஒன்பது டயலில் இருக்கு. பதினொன்று எங்கே?

34. வாடிக்கையாளர்: என்ன சார் உங்க பத்திரிகைக்கு இவ்வளவு ஜோக்ஸ் அனுப்பி வச்சுருக்கேன் எதுக்குமே பணம் தரமாட்டேன்றீங்களே?

அச்சகர்: இது கூட நல்ல ஜோக்தா‌ன்! ஆனா இதுக்கும் பணம் தரமுடியாது!

35. வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்,

வானொலி தொழிலாளி: ஹலோ வணக்கம்! வணக்கம்! சொல்லுங்க…

நேயர்: வணக்கம்தான் சொல்லிட்டேனே!!

36. பெண்: ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?

கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம் 

பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..

கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம் 

பெண்: இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார் 

கஸ்டமர் கேர்: 😯 😯

37. மன்னர் : போர் முரசு ஒலிகேட்கிறதே…! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே ?

அமைச்சர் : அஞ்சாதீர்கள் மன்னா…! மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக் கொண்டிருக்கிறார்கள் !

மன்னர் : ????????????

38. ஒருவன் : மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்…

மற்றவன் : உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா…?

ஒருவன் : ???

39. தளபதி : மன்னா, காளைப்படை ஒன்றை நமது படையில் சேர்ப்போமா?

மன்னர் : நான்தான் காலையே படையாக வைத்து இருக்கிறேனே, பின் எதற்கு காளைப்படை!!!

தளபதி : ???

40. அரசர் : சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தான் என் மகளை திருமணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!

மந்திரி : இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!

அரசர் : ?????????????

41. ராஜா : மந்திரியாரே! இப்போதெல்லாம் நமக்குப் புறாவிடம் இருந்து மெயில் வருவதில்லையே, ஏன்?

மந்திரி : அதுதான் ஈ-மெயிலில் எல்லாம் வந்துவிடுகிறதே பிரபு!

42. மருமகன் : கமலா, நான் புதுசா கண்ணாடி போட்ட பிறகுதான் நீ எவ்வளவு அழகா இருக்கேன்னு தெரியுது.

மாமியார் : மாப்ளே, நான் கமலா இல்லே! அவளோட அம்மா.

மருமகன் : ?????????

43. அரசன்: புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?

புலவர்: மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!

44. மாமனார் : நூறாவது நாள் முடிந்து வெற்றிகரமான 150வது நாளை நோக்கி

மாப்பிள்ளை : எந்த படத்தைப் பத்தி சொல்றீங்க மாமா

மாமனார் : படத்தைப் பத்தி இல்ல, நீங்க ஊர்ல இருந்து வந்த விஷயத்தைப் பத்தி சொல்றேன்.

45. ஒருவர் : அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு?

மற்றவர் : ஏன்?

ஒருவர் : அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே அதான்?

46. காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.

காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?

காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!

மேலும் பல ஜோக்ஸ்களைப் படிக்க,

கடி ஜோக்ஸ் | Kadi jokes in tamil

Leave a Comment