Kamarajar kavithai in tamil | காமராஜர் பற்றிய கவிதைகள்

Kamarajar kavithai in tamil – இந்தத் தொகுப்பில் நம் தமிழ்நாட்டிற்கு கல்வித்தந்தை எனப் போற்றப்படும் காமராஜர் பற்றிய கவிதைகளை தான் காணப்போகிறோம்.

Kamarajar kavithai

காமராஜர் கவிதைகள் | kamarajar kavithai in tamil

இனி ஒருமுறை தான் ஆட்சிக்கு வந்தாய்! ஆனால் பல ஆட்சிகள் பேசும் அளவிற்கு நல்லது செய்தாய்!

எளிமைக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு! நம் தமிழ்நாட்டு மக்கள் தான் உன் உயிர் காற்றும்!

உழைப்பால் உயர்ந்த வல்லர் இவரே! ஊருக்கு உழைத்த உத்தமர் இவரே! நாட்டிற்காக வாழ்ந்த நல்லவர் இவரே!

தன்னை மறந்து பிறரை நினைத்து தன் வீட்டையும் மறந்து நாட்டுக்காக வாழ்ந்தவர்!

பல அணைகள் கட்டி நீரைத் தேக்கியவர்! அந்நீரைக் கொண்டு விவசாயம் காத்தவர்! விவசாயம் செழிக்க மின்சாரமும் கொடுத்தவர்!

பயிர்கள் விளைந்தால் உயிர்கள் வாழும் என்பதால் பசுமை செழிக்க, பல திட்டங்கள் செய்தவர்.

விவசாயத்திற்கு வித்திட்ட இவர் பெயர் நிலைத்து நிற்கும் தமிழகம் வாழும் வரை.

ஆற்றினிலே இமயமலை! அன்பினிலே மேருமலை! எத்தனையோ ஆட்கள் உண்டு ஆனாலும் இவரை போல யாருண்டு!

தனக்கென வாழாததால் பெருந்தலைவர் என்றானார்… தர்மத்தின் தலைவனாக, தரணியிலே வாழ்ந்து வந்தவர்…

இவர் வாழ்ந்த காலமே காவியமாய்! இவர் வாழ்ந்த வருடங்கள் பொற்காலமாய்!

பல பேரறிவு கொண்ட மாணவர்கள் மனதில் நம்பிக்கை நாயகனாய் இவர் முகம் மட்டுமே.

அருண் தலைவர் இவர்! பெருந்தலைவர் இவர்! பொதுநலத் தொண்டில், முழுவதுமாய் நின்றவர் இவர்!

பொருள் தேடலில் இவர் இறங்கவில்லை செல்வ வளத்தை இவர் சேர்க்கவில்லை அதனால்தானோ இவர் இன்றளவும் போற்றப்படுகிறார்.

பகட்டான வாழ்க்கையை மறக்க வைத்தவர் இவரே! பண்பாக வாழ்ந்து காட்டி பல இதயங்களை தொட்ட வரும் இவரே!

அழகு தமிழிலே இவரது பேச்சு… சமத்துவம் என்பதே இவரது மூச்சு…

ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் காண சேவை செய்த பெருந் தலைவர் இவரே! கல்வி சிறந்தால் நாடு செழிக்கும் என்பதால் கல்லாமை என்பதை இல்லாமல் செய்தவர் இவரே!

மனிதாபிமானம் கொண்ட தென்னாட்டு காந்தி இவர்… கதராடை அணிந்த கல்வியின் தந்தை இவர்…

தர்ம வீரரும் இவரே! கர்ம வீரரும் இவரே! தமிழகத்தில் சுதந்திர தியாகிகளில் இவரும் ஒருவரே!

வறுமையில் சிறுவன் கூட வேலைக்கு கால்பதித்த நேரத்தில், வயிற்றுப் பசியையும் போக்கி அறிவு பசியையும் போக்கியவர் இவரே.

பிறர் நலம் வாழ தன் நலம் துறந்தவர்.

கடமையைக் கண் என கொண்டவர்! சுதந்திரத்திற்கு முன் பிறந்தே நம் நாட்டிற்கு உழைத்தவர்!

அனைவரையும் மதிப்பவர்! தமிழகத்தின் எதிர்காலத்தை நினைப்பவர்!

தன்னை போன்றே பிறரை கருதுபவர்! தான் தான் பெரிது என்று கர்வம் கொள்ளாதவர்!

இளமையிலிருந்தே எளிமையாக வாழ்ந்தவர் இதுதான் தன் பாதை என்று நமக்காகவே வாழ்ந்தவர்.

தனிப்பட்ட தன் வெற்றி தோல்விகளை நினையாமல் நாட்டின் வெற்றியை மட்டும் நினைத்த ஒரே தலைவர் இவரே.

மக்கள் வளர்ச்சியை மனதில் கொண்டவர் மணவாழ்க்கை கூட கொள்ளாமல் நமக்காகவே வாழ்ந்தவர்.

காமராஜரின் தாரக மந்திரமாய் தாயகம் இருந்ததனால், தாயகத்தில் இன்று தாரக மந்திரமாய் காமராஜர் இருக்கின்றார்.

தன்னாட்டு சிங்கத்தமிழன் இவர்! நேசம் போற்றும் வரலாற்று தலைவர் இவர்!

இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தவர் இவரே! இலட்சங்களை விரும்பாத தலைவரும் இவரே!

கொடுத்த டாக்டர் பட்டத்தையும் மறுத்தவர் இவரே! கொண்ட கொள்கைக்காக உழைத்தவரும் இவரே!

இவரது உன்னத உடையும் பெண்மையே! அதுபோல இவரது உள்ளமும் வெண்மையை!

நேர்மையே இவரது அடையாளம் எளிமையே இவரது அவதாரம்.

மேலும் இது போன்று பல தலைவர்களைப் பற்றிய கவிதைகளைப் படிக்க,

அப்துல் கலாம் கவிதைகள் | A.P.J Abdul kalam kavithai in tamil

கல்வி கவிதைகள் | Kalvi kavithai in tamil

10 thoughts on “Kamarajar kavithai in tamil | காமராஜர் பற்றிய கவிதைகள்”

Leave a Comment