Bhagavad gita quotes in tamil - இந்த தொகுப்பில் நம் வாழ்க்கையில் வெற்றி பெற மற்றும் நம் மன வலிமையை அதிகரிக்க உதவும் பகவத் கீதை பொன்மொழிகளை தான் காண போகிறோம்.
உள்ளடக்கிய தலைப்புகள்
- பகவத் கீதை தத்துவங்கள்
- Bhagavath geethai quotes in tamil
- Famous Mahabharata Quotes in tamil
- bagavath geethai ponmoligal in tamil
- Krishna Quotes in tamil
பகவத் கீதை பொன்மொழிகள் | bhagavad gita quotes in tamil
1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
2. கற்ற அறிவையும் பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
3. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
4. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான் சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
6. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாக இருக்கும்.
7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
11. முன்னோக்கிச் செல்லும் போது கனிவாயிரு, ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும் துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன ஒன்று காலம் இன்னொன்று மெளனம்.
14. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
15. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
16. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
17. சண்டைக்கு பின் வரும் சமாதானத்தை விட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.
18. நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
19. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
20. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
21. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம் ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
22. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
23. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
24. நீ எதிர்பார்க்கும் பாசம் ஓரிடத்தில் தடை பட்டால் அதில் ஏற்படும் வலி அதிகம் தான். ஆனால் அதை நீ உன்னை பக்குவப்படுத்த பயன்படுத்திக்கொள், கடினம் தான். ஆனால், இதுவே நிரந்தரம்.
25. சில நேரங்களில் நாம் சரியான இலக்கை தீர்மானிக்கிறோம். ஆனால், தவறான இலக்கை சென்றடையும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்படுங்கள்.
26. காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் தன் கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக்கூடாது.
27. யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால் கவலை ஏன்? யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறார்களோ அந்த தூரத்தில் வாழ கற்றுக்கொள். அதனால் ஒரு நஷ்டமும் இல்லை உன்னோடு நான் இருக்கிறேன்..! அது போதாதா?
28. உங்கள் வாழ்வானது உங்கள் எண்ணப்படியே அமையும் எண்ணத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்.
29. எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்கள் தரும். கடமையைச் செய் பலனை எதிர்பாராமல் இருப்பதே அநேக அற்புதங்களுக்கு வழி வகுத்து விடும்.
30. எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கிறது, தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கிறது.
31. உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து கவலை கொள்வதை விடுத்து கிடைத்ததை வைத்து பொறுமை கொண்டால் உங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்.
32. புகழ்பூத்த பெருமைகளுடன் மக்கள் மன்றத்தில் நாயகனாய் போற்றப்படுபவர், இழிவான செயல்களில் ஈடுபட்டு மானத்தை இழக்க நேர்ந்தால் அந்த நிலை மரணத்தை விட மோசமானது.
Krishna Quotes in tamil - இதுபோல நம் வாழ்க்கைக்கு தேவைப்படும் பல பயனுள்ள பொன்மொழிகளை படிக்க,
பிரபாகரன் பொன்மொழிகள் | Prabagaran tamil quotes
அண்ணாதுரை பொன்மொழிகள் | C. N. Anadurai quotes in tamil
ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் | Abraham Lincoln Tamil Quotes