Karl Marx quotes in tamil | கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

Karl Marx quotes in tamil – இந்தப் பதிவில் காலம் கடந்து நிற்கும் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகளை தான் காண போகிறோம்.

கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் | karl marx quotes in tamil

Karl Marx quotes in tamil

1. காலம் மனித வளர்ச்சி நடைபெறுவதற்கான வெளி.

-கார்ல் மார்க்ஸ்

2. ஒருவன் தனக்காக, தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான். ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்.

-கார்ல் மார்க்ஸ்

3. மனிதன் தன்னுடைய சகமனிதனின் உயர்வுக்காகவும், நன்மைக்காகவும் பாடுபடுவதன் மூலமே அவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.

-கார்ல் மார்க்ஸ்

4. நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ் செல்வமாகும்.

-கார்ல் மார்க்ஸ்

5. உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.

-கார்ல் மார்க்ஸ்

6. ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.

-கார்ல் மார்க்ஸ்

7. தொழிலாளர்களின் திறமையான உழைப்பிலேயே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறது.

-கார்ல் மார்க்ஸ்

8. பொது நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலம் தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது.

-கார்ல் மார்க்ஸ்

9. உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

-கார்ல் மார்க்ஸ்

10. தாயின் கோபம் பூமேல் பனி மாதிரி.

-கார்ல் மார்க்ஸ்

11. அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது என்பது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.

-கார்ல் மார்க்ஸ்

12. ஆழ்ந்து சிந்தித்தபின் முடிவெடுப்பவனே வெற்றிகரமான மனிதனாக விளங்கமுடியும்

-கார்ல் மார்க்ஸ்

13. மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் மனிதன்தான் மகிழ்ச்சிகரமான மனிதன் என்று வரலாறு வரவேற்கிறது.

-கார்ல் மார்க்ஸ்

14. ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்தால் பயனின்றி அழியக்கூடாது இதனை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்.

-கார்ல் மார்க்ஸ்

15. உழைப்புதான் எல்லாச் செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.

-கார்ல் மார்க்ஸ்

16. ஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது.

-கார்ல் மார்க்ஸ்

17. நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.

-கார்ல் மார்க்ஸ்

18. தத்துவ ஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். ஆனால், அதை மாற்ற வேண்டியதுதான் இப்போதுள்ள கடைமை.

-கார்ல் மார்க்ஸ்

19. சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது.

-கார்ல் மார்க்ஸ்

20. நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.

-கார்ல் மார்க்ஸ்

21. இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே.

-கார்ல் மார்க்ஸ்

22. சோசலிசத்திற்கான பாதை ஜனநாயகம்.

-கார்ல் மார்க்ஸ்

23. காரணம் எப்போதும் இருந்து வருகிறது, ஆனால் எப்போதும் நியாயமான வடிவத்தில் இல்லை.

-கார்ல் மார்க்ஸ்

மேலும் இது போன்று பல சிந்தனை வரிகளை வாசிக்க,

சாக்ரடீஸ் பொன்மொழிகள் | Socrates quotes in tamil
பாரதியார் பொன்மொழிகள் | Bharathiyar quotes in tamil
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள் | Nethaji quotes in tamil

Leave a Comment