இந்தப் பதிவில் உழைப்பாளர்களின் உணர்வையும் மற்றும் கஷ்டத்தையும் எடுத்துக்கூறும் வகையில் உழைப்பாளர்கள் கவிதைகளை இப்பொழுது காணப்போகிறோம்.
- Ulaipalar dhinam kavithai In tamil
- May 1 kavithai in tamil
- உழைப்பாளி தின கவிதை
- உழைப்பாளி பற்றிய கவிதை
- உழைப்பாளிகள் தினம் கவிதை

உழைப்பாளர் கவிதைகள் | Ulaipalar Kavithai in tamil
உன் பசி பொறுத்து எங்கள் பசி ஆற்றுப்பவரே! தன் வறுமையிலும் பிறர் வறுமையை போக்குபவரே!
உழைப்பாளி உன்னை நம்பியே நாங்கள் உன் சேவை எங்களுக்கு தேவை.
உன் வேர்வை நாற்றம் உலகின் உயர்வை மாற்றும்.
உழைப்பாளிகளே, உன் கரத்தின் வலிமை இரும்பிற்கு கூட இல்லை.
உழைப்பவர்களின் வேலையே வறண்ட பூமியின் தாகம் தீர்க்கும் அமிர்தம்.
உன் வியர்வை நாற்றமே முதலாளிகளின் வீட்டில் நறுமணமாய் வீசுகிறது.
வறுமையோடும் வேதனையோடும் நீ, உம்மால் பலத்தோடும் சுகத்தோடும் செல்வந்தர்கள்.
கட்டிட துணியின்றி நீ கோமணத்துடன், முதலாளியை கட்டில் மெத்தை உடன் உறங்க வைத்துவிட்டாய்.
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களின் வாழ்வு செழிக்க உதிரம் சிந்திக்கிறாய் இந்த குணத்தை நான் எங்கு போனா காண இயலுமா!
பணக்காரனின் கடனை தள்ளுபடி, ஆனா ஏழையின் கடனோ கேள்விக்குறி.
உழைப்பாளி உனக்கு முதுமையும் இல்லை ஓய்வும் இல்லை ஆனால் நீயோ இன்றளவும் தளரவில்லை.
சுமைகளை மட்டும் சுமக்கும் உழைப்பாளி மனதில் சுமைகள் இல்லை ஏனெனில் உழைப்பாளிகளுக்கு சுமைகள் தான் மனது.
உழைப்பாளியின் உழைப்பால் செழிக்கும் செல்வந்தன் முதலாளி மட்டுமே.
கயவர்கள் உழவும் நாட்டில் நீ வெல்வது எப்படி.
இவ்வுலகிற்கு உழைப்பை சுரண்டும்பவனே மேதாவி.
உழைப்பவர்களுக்கு உயிர் உண்டு அவர்களை மதியுங்கள் மனிதனாய்.
இத்தகைய சிறப்பு மிக்க உழைப்பாளிகளை எந்திரமாய் பாராமல் மனிதனாய் பாருங்கள்.
எனவே இந்த பதிவு பிடித்து இருக்கும் மற்றும் கண்டிப்பாக இந்த வலைதள பதிவு உழைப்பாளிகளுக்கு பிடித்திருக்கும் ஏனெனில் அவர்களின் கஷ்டத்தை என் கவிதை வரிகளால் கூறி உள்ளேன்.
மேலும் இது போல் பல கவிதைகள் மற்றும் பொன்மொழிகளை படிக்க நம் இணைய தளத்தை பின்தொடருங்கள்.
மேலும் உங்களுக்காக சில கவிதைகள் கீழே,